ஐதராபாத்: பாகுபலி படத்தில் நடித்த நடிகர் மற்றும் அவரது தந்தையின் மீது நிலஅபகரிப்பு புகார் எழுந்ததால் அவர்கள் மீது நீதிமன்றம் வழக்குபதிந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தெலுங்கு நடிகர் ராணா டக்குபதி (பாகுபலி படத்தில் நடித்தவர்) மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகரில், தொழிலதிபர் பிரமோத் குமார் என்பவரின் நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. மேலும் ரவுடிகளை ஏவி விட்டு பிரமோத் குமாரை மிரட்டியதாகவும், இடத்தை காலி செய்யுமாறு அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இ
தையடுத்து பாதிக்கப்பட்ட பிரமோத் குமார், நம்பள்ளி நீதிமன்றத்தில் நடிகர் ராணா டக்குபதி மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து ராணா டக்குபதி மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் நீதிமன்றம் வழக்கு பதிந்துள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.